சுவிட்சர்லாந்தில் இம்முறை பனிச் சரிவு சம்பவங்களினால் அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குளிர்காலங்களில் வழமையாக இடம்பெறும் உயிரிழப்பு சம்பவங்களை விடவும் இருமடங்கான அளவு உயிரிழப்பு சம்பவங்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குளிர்காலம் ஆரம்பானது முதல் பனிப்பாறை மற்றும் பனிமலைச் சரிவுச் சம்பவங்களினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக குளிர் பருவகாலத்தில் இவ்வாறான விபத்துக்களின் மூலம் சராசரியாக 13 பேர் வரையில் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இம்முறை பனிப்பாறைகளின் தன்மை தொடர்பில் உறுதியான எதிர்வு கூறல்களை வெளியிட முடியாத நிலை காணப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் பனிமலைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய உரிய உபகரணங்களை பயன்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



Posted in 






