தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. நடிகையாவும், தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் சோனா சமீபத்தில் தனது சொந்த வாழ்க்கையை படமாக்கபோவதாக அறிவித்தார். இப்படி அறிவித்ததில் இருந்து தனக்கு, இதுவரை 45 கொலை மிரட்டல்கள் வந்ததாக நடிகை சோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏற்கனவே எனது சொந்த வாழ்க்கையை பத்திரிக்கைகளில் தொடராக எழுதி வருகிறேன். விரைவில் இதை படமாக இயக்க உள்ளேன். திரையுலகின் திருட்டு பக்கங்கள் இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இதன் மூலம் நிறைய பிரபலங்களின் ரகசியங்களும் வெளியாகும். என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தைரியமாக இப்படத்தை எடுப்பேன். மேலும் இப்படத்தை நானே தயாரிக்கவும், முக்கிய கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தற்போது படத்திற்கு ஏற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியில் முன்னணி நடிகர்களை 14 பேரை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.









