இங்கே ஒரு நித்யானந்தர்-பார்த்திபனின் நக்கல்!

அருண் விஜய் நடித்த மலை மலை படத்திற்கு 100 வது நாள் விழா கொண்டாடினார்கள். ஏவிஎம் சரவணன், கேஆர்ஜி, எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன், கார்த்திக் என்று மேடையில் அளவான விருந்தினர்கள்.

முன்னதாக பேசிய எஸ்பிஎம், படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் மலை மலை என்று வர்ணித்துக் கொண்டே வந்தார். அதற்காக அவர் வேதிகாவையும், கஸ்தூரியையும் மலை மலை என்று குறிப்பிட்டது அநியாயம்!

தனது பேச்சில் வசமாக இதை பிடித்துக் கொண்டார் பார்த்திபன். வேதிகாவையும் கஸ்தூரியையும் மலை மலைன்னு வர்ணிக்கறதுக்காகவே முத்துராமன் சார் எல்லாரையும் மலை மலைன்னு சொல்லிட்டு வந்தாரு போலிருக்கு என்று சொல்ல, சற்றே நெளிந்தார் எஸ்பிஎம். 50 காட்சிகள் என்று போஸ்டர் ஒட்டுற அளவுக்குதான் படங்கள் இப்போ ஓடிட்டு இருக்கு. இந்த நேரத்தில 100 நாள் விழா கொண்டாடுறது நிஜமாகவே சந்தோஷமான விஷயம் என்று பாராட்டிய பார்த்திபன், அப்படியே சந்தடி சாக்கில் நித்தியானந்தரையும் ஒரு நெருக்கு நெருக்கினார்.

இந்த மேடையில நித்யானந்தர் மாதிரி ஜம்முன்னு உட்கார்ந்திருக்காரு விஜயகுமார். அதாவது நித்யமும் ஆனந்தமா இருக்கிறவரு அவரு. எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் முகத்திலே சிரிப்பு மாறாம இருப்பாரு. நம்மள கட்டி அணைச்சு அந்த சிரிப்பை நமக்கும் பாஸ் பண்ணுவாரு. நம்மளை கட்டி அணைக்கிறாரேன்னு நாம நினைப்போம். ஆனா பின்னாடி நாலு இளம் பெண்கள் வந்துகிட்டு இருப்பாங்க. அவங்களை அடுத்ததாக அணைக்கறதுக்காகவே நம்பளை அணைப்பாரு என்று கூறி அந்த ஏரியாவையே கலகலப்பாக்கிவிட்டு போனார்.

எங்க அம்மா முன்னாடி இப்படி ஒரு விழா எடுக்கணும்ங்கறது என்னோட கனவு. அதை நிறைவேற்றிட்டேன். அது போதும் என்று மனமுருகினார் அருண் விஜய்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review