அவர்களும் இவர்களும் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு முட்டம் கடற்கரையில் இன்று நடந்தது. நடிகர் சதீஷ், விமல், நடிகைகள் சுப்ரஜா, ஐஸ்வர்யா ஆகியோர் கடலோரம் அமர்ந்து பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து 4 பேரையும் இழுத்துச்சென்றது. அருகில் இருந்த பாறையை பிடித்து நடிகர், நடிகைகள் தத்தளித்தனர். அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்புக்குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டனர்.
படப்பிடிப்பின்போது திடீரென நடிகைகளை அலை இழுத்துச்சென்ற சம்பவம் படப்பிடிப்பினரிடையே சிறிது நேரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




Posted in 




